ரஜினியின் '2.0' படத்தின் முக்கிய பணி முடிந்தது

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டுமே இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் உள்பட அனைத்து நட்சத்திரங்களின் டப்பிங் பணி முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது., இருப்பினும் VFX மற்றும் மற்ற போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2D, 3D, ஐமேக்ஸ் ஆகிய டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் அரசியல் பிரவேச வதந்தி குறித்து எஸ்.ஏ.சி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஒருபுறம் கடந்த பல ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இளையதளபதி விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது...

கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ஜெய்-அஞ்சலி காதல் திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடி போல் இன்னொரு நட்சத்திர ஜோடியான ஜெய்-அஞ்சலி உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த வதந்தியை இரு தரப்பினர்களும் மறுக்காததால் இதில் உண்மை இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்...

விஜய்சேதுபதி-கே.வி.ஆனந்த் இணைந்த 'கவண்'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் அவர்களும், வருடத்தில் மிக அதிக படங்களை ரிலீஸ் செய்யும் முன்னனி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியும் முதல்முறையாக இணைந்த 'கவண்' திரைப்படம் வரும் வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆகவுள்ளது