கொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மேலும் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க களம் இறங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் தங்களுடைய கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஆவேசமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சத்தியமாக விடவே கூடாது என்ற தலைப்பில் அவர் கூறியுள்ள இந்த கருத்தில் ’தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது’ என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த கொந்தளிப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

ஜெயராஜ் கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தும் சிபிசிஐடி டி.எஸ்.பி: தாமாக முன்வந்து தகவல்களை தரும் வியாபாரிகள்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில்

நெய்வேலி லிக்னசைட் ஆலையில் ஏற்பட்ட விபத்து!!! 17 பேர் காயம் மற்றும் பரபரப்பு தகவல்கள்!!!

நெய்வேலி லிக்னைட் ஆலையில் 2 ஆம்  நிலையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா மருந்து: நாங்க அப்படி சொல்லவே இல்லையே… பல்டி அடித்த பதஞ்சலி நிறுவனம்!!!

7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றை குணமாக்கும் ஆயுர்வேத மருந்து கிட்டை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜுன் 23 ஆம் தேதி வெளியிட்டது.

கட்டாயக் கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு காப்பர்-டி, என சிறுபான்மையினரை வதைக்கும் சீன அரசு!!!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

திருமணமான 2 நாட்களில் மணமகன் மரணம்: திருமணத்தில் கலந்த 100க்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா!

பீகாரில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் மணமகன் மரணம் அடைந்ததும் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்