close
Choose your channels

உன்னை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே: சிகிச்சை பெறும் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்று கூறியதற்கு ரஜினிகாந்த் ஆடியோ மூலம் அவருக்கு ஆறுதல் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்’ என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த ரசிகருக்காக ஆடியோ ஒன்றை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் தனது ரசிகரை தைரியமாக இருக்க அறிவுறுத்திய ரஜினிகாந்த், விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் குணம் அடைந்த பின்னர் குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வருமாறும் அந்த ஆடியோவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.