close
Choose your channels

இன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி

Saturday, May 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் ஒரு முடிவும் தமிழகத்தில் மட்டும் வித்தியாசமான முடிவும் கிடைத்துள்ளது. மக்களவை தேர்தலில் முழுமையாக திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் அதேபோன்று வாக்களிக்காததால் தமிழகத்தில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சி மாற்றம் இல்லை என்ற நிலையே உள்ளது.

இதன் காரணமாக சட்டமன்ற தேர்தலின்போதுதான் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறிய ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்க இன்னும் சுமார் இரண்டு வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளரும் பாஜக பிரமுகருமான எஸ்.குருமூர்த்தி, 'எம்ஜிஆரை போலவே ரஜினியும் ஆன்மீகத்திலும் தேசியத்திலும் நம்பிக்கை கொண்டவர். அபரிதமான மக்கள் செல்வாக்கை கொண்டவர். எனவே அவர் தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டால் இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார். பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைய வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால் இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். ரஜினி அரசியலில் சாதிப்பார் என்பது எனது நம்பிக்கை' என்று தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.