கவர்னரை சந்தித்தவுடன் மோடி சொன்னதை நிறைவேற்றிய ரஜினி: சமூக வலைத்தளங்களில் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,August 11 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் கவர்னரை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஆகியுள்ள நிலையில் கவர்னரை சந்தித்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தேசியக்கொடியை பதிவு செய்துள்ளார்

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்க செய்யுமாறு பிரதமர் நரேந்த மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர், பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேசியக்கொடியை முகப்பு படமாக பதிவு செய்திருந்தார். அவரை அடுத்து பாஜகவில் உள்ள பிரமுகர்கள், மத்திய அமைச்சர்களும் தங்கள் சமூக ஊடகங்களில் தேசியக்கொடியை முகப்பு படமாக பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கவர்னரை சந்தித்து வந்த இரண்டு நாட்களில் நடிகர் ரஜினிகாந்தும் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பில் தேசியக்கொடியை பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.