close
Choose your channels

ரஜினிகாந்த் 2வது மகள் செளந்தர்யா காவல் நிலையத்தில் திடீர் புகார்.. என்ன காரணம்?

Wednesday, May 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்பதும் இதனை அடுத்து அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் தான் அவரது நகைகளை திருடியதாக போலீசார் கண்டுபிடித்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது காரின் மற்றொரு சாவியை காணவில்லை என அவருக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்தபோது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.