close
Choose your channels

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை அடுத்து ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

Thursday, January 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் சமீபத்தில் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்துக்கு இதுகுறித்து எடுத்துள்ள முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் 18 ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யா கணவரை பிரிய எடுத்த முடிவுக்கு ரஜினிகாந்த் உடன்படவில்லை என்றும் அவர் தனது மகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தனுஷூடன் சேர்த்து வைக்க முயற்சி எடுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட பிரிவு தற்காலிகமானது என்றும் கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டைதான் என்றும் அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்வோம் என்றும் கூறியிருந்தார்.

எனவே ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா ஆகிய இரு தரப்பும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுவதால் மீண்டும் இருவரும் இணைய உள்ளனர் என்ற நல்ல செய்தி விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.