close
Choose your channels

பொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறான் அதுவரை பொறுத்திருங்கள்’ என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஒரு சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிற்து.

மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள் தன்னிடம் வர வேண்டாம் என்றும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டும் தன்னுடன் இருந்தால் போதும் என்றும் ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது மாவட்ட செயலாளர்களின் கூட்டம் முடிவடைந்து ஒரு சில மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக ரஜினிகந்த் சந்தித்து வருவதாகவும் இன்னும் சில நிமிடங்களில் அவரது தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக தற்போதைய சூழ்நிலையில் கட்சி தொடங்கினால் வரவேற்பு எப்படி இருக்கும் என்றும், மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் ரஜினிகாந்த் கேட்டதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக பதில் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos