ரஜினிக்கு நெருக்கமான நண்பரின் மகன் திடீர் கைது.. அரசியல் காரணமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் பின்னணி தான் காரணம் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மோகன் பாபு மற்றும் மஞ்சு மனோஜ் ஆகிய இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இது குறித்து ஏற்கனவே தனது மகன் மீது மோகன் பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், திருப்பதி அருகே சந்திரகிரி என்ற பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மஞ்சு மனோஜ் கலந்து கொண்டார். அப்போது, திடீரென அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, ஆந்திர பிரதேச அமைச்சர் நாரா லோகேஷை சந்தித்து மஞ்சு மனோஜ் பேசியதாகவும், விரைவில் அரசியலில் அவர் குதிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மோகன் பாபு புகாரின் அடிப்படையில் மஞ்சு மனோஜ் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com