கலைஞானத்தை அடுத்து மேலும் 10 பேர்களுக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் ரஜினியை முதன் முதலாக ஹீரோ ஆக்கியவருமான கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசிப்பதாக கேள்விப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள், சமீபத்தில் கலைஞானம் அவர்களுக்கு சொந்த வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த வீட்டின் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கலைஞானத்தை அடைந்து மேலும் பல பேர்களுக்கு ரஜினிகாந்த் அவர்கள் தற்போது வீடு கட்டிக் கொடுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து பேர்களுக்கு வீடு கட்டித் தருவதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பின்படி தற்போது அந்த வீடுகள் தயாராகிவிட்ட நிலையில் இன்று அவர்களை தனது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வரவழைத்து அவர்களுடைய கையில் வீட்டின் சாவியை ஒப்படைத்தார். வீடுகளை பெற்ற 10 பயனாளிகளும் ரஜினிக்கு நன்றி தெரிவித்து குடும்பத்துடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

முன்னதாக இந்த வீடு வழங்கும் விழா நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் தற்போது ஒருநாள் முன்கூட்டியே இந்த விழா நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது