close
Choose your channels

ரஜினியின் 'முள்ளும் மலரும்' பட தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Saturday, February 1, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’முள்ளும் மலரும்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்த ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1978 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சோபா, ஜெயலட்சுமி , சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’முள்ளும் மலரும்’ ரஜினியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

இந்த நிலையில் இந்த படத்தை ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் என்பவர் தயாரித்திருந்த நிலையில் அவர் இன்று காலமானார். ’முள்ளும் மலரும்’ தவிர ’சிறை’ ’கலியுகம்’ ’உத்தம புருஷன்’ ’தர்மசீலன்’ ’ராஜா கைய வச்சா’ ’பங்காளி’ ’சின்ன கவுண்டர்’ ’நதியை தேடி வந்த கடல்’ உள்பட பல படங்களை இவர் தயாரித்துள்ளார்.

70 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும் செந்தில், விக்கி ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

அவருடைய இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருடைய உடல் அவருடைய வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான திரையுலகினர் நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment