close
Choose your channels

டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டெல்லி வன்முறை குறித்து முதல்முறையாக தனது பேட்டியில் கூறியுள்ளார்

டெல்லி கலவரத்திற்கு காரணம் உளவுத்துறையின் தோல்வி தான் என்றும் டெல்லி கலவரத்திற்கு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்

சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் சிஏஏ சட்டத்தை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் கருதுவதாகவும் அவர் இன்று அளித்த பேட்டியில் கூறினார் இதைச் சொல்வதால் நான் பாஜக ஆள் என்று சொல்லாதீர்கள் என்றும் என்னை பாஜக ஆள் என்று சிலர் கூறுவது வேதனை அடைய செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் என்றுதான் தான் கூறியதாகவும் வன்முறையில் போராடுபவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் கூறினார்

டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் உளவுத்துறையின் தோல்வியே மிகப் பெரிய கலவரமாக மாறியதற்கு காரணம் என்றும் அதற்காக மத்திய அரசை தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் மேலும் தெரிவித்தார்.

வழக்கம்போல் ரஜினியின் இந்த பேட்டி தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வாரம் தீனியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.