ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. தமிழ் நடிகரின் மகள் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,October 22 2023]

தமிழ் நடிகரின் மகள் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினியிடம் இருந்து தனது தந்தைக்கு அழைப்பு வந்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஹீரோ, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன் . இவர் ரஜினியுடன் ’வீரா’, ’சிவாஜி’, ‘அண்ணாத்த’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது உருவாகி வரும் ’லால்சலாம்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் ரஜினியுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது நண்பர்களை அவ்வப்போது தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் லிவிங்ஸ்டனை சமீபத்தில் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

இதுகுறித்து லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ‘இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத, நினைவில் வைத்து பாதுகாக்கும் ஒரு நாள். சூப்பர் ஸ்டார் அவர்கள் என் தந்தையை அவரது வீட்டுக்கு அழைத்து இருந்தார். அப்பாவுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள நெருக்கம் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

இன்று மட்டும் எனக்கு படப்பிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் நானும் என் தந்தையிடம் கெஞ்சி அவரோடு சென்றிருப்பேன். இருப்பினும் விரைவில் ஒரு நாள் அவர்களை சந்திப்பேன். ரஜினி அவர்கள் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் ரஜினியும் லிவிங்ஸ்டனும் இணைந்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

'கைதி', சர்தார்' படங்களை அடுத்து இன்னொரு 2ஆம் பாகம் படம்.. கார்த்தியின் மாஸ் திட்டம்..!

கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் சர்தார்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி

துர்கா தேவியாக மாறிய ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நவராத்திரி ஸ்பெஷலாக நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவியாக மாறி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

3 நாட்களில் இத்தனை கோடியா? தெலுங்கிலும் மாஸ் வசூல் செய்யும் 'லியோ'

தளபதி விஜய் நடித்த 'லியோ'திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதல் நாளே உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய்க்கு

மீண்டும் ஒரு பிரபலத்தின் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 சமீப காலமாக நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் என்பதும் அவர் வில்லனாக நடித்த 'மாநாடு' 'டான்'  'வாரிசு' 'மார்க் ஆண்டனி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன என்பதை பார்த்தோம்.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா இந்த பிரபலத்தின் திரைப்படம்?

 பொங்கல் ரிலீஸ் பட்டியலில் ஏற்கனவே ரஜினியின் 'லால் சலாம்' உள்பட 3 திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலத்தின் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைய வாய்ப்பு இருப்பதாக