close
Choose your channels

“எம்.ஜி.ஆர்- க்கு பிறகு ரஜினிதான்: 'தர்பார்' இசைவிழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் ஷங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்

இந்த விழாவில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் பேசியபோது ’எம்ஜிஆர் அவர்களுக்கு பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் உடல் மொழியாலும் உச்சரிப்பிலும் சாதித்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிதான் என்று பேசினார். இவ்வாறு அவர் பேசிய உடன் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் ’அண்ணாமலை படம் தான் முதன் முதலாக தான் தியேட்டரில் பார்த்து வியந்த படம் என்று அவர் கூறினார்

அதேபோல் பாடலாசிரியர் விவேக் அவர்கள் பேசும்போது ’திருநங்கைகளை போற்றும் வகையில் இந்த படத்தில் ஒரு தனிப்பாடல் இருப்பதாகவும், அந்த பாடல் நிச்சயம் அனைவரையும் கவரும் என்று கூறினார். மேலும் இந்த பாடலில் ஒரு முக்கியமான சமூக கருத்தும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மொத்தத்தில் தர்பார் ஆடியோ விழா மிகச் சிறப்பான முறையில் ரசிகர்களின் கரகோஷம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.