ரஜினியின் 2ஆம் கட்ட ரசிகர்கள் சந்திப்பு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை முதல்கட்டமாக கடந்த மே மாதம் சந்தித்தார். அப்போது அரசியல் வருகை குறித்து 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏறபடுத்திய நிலையில் 'காலா' மற்றும் 2.0 படப்பிடிப்பு முடிந்தவுடன் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இதுவரை ரஜினிகாந்த் திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் உள்பட 17 மாவட்ட ரசிகர்களை சந்தித்துள்ள நிலையில் மீதமுள்ள மற்ற மாவட்ட ரசிகர்களுடனான சந்திப்பு குறித்த தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாம் கட்ட ரசிகர்களின் சந்திப்பு டிசம்பர் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும், இந்த சந்திப்பு வழக்கம்போல் சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் அவர் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மற்ற ஹீரோக்களில் இருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுவது எதில்? நடிகர் சார்லி

நடிகர் சார்லி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது தெரிந்ததே.

மெர்சல் தயாரிப்பாளருக்காக தனுஷ் எடுக்கும் 2வது முயற்சி

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக தனுஷுடன் கைகோர்க்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை கடந்த மாதம் பார்த்தோம்

'தளபதி 62' படத்தின் டைட்டில் இதுவா?

தளபதி விஜய், 'மெர்சல்' என்ற சூப்பர்ஹிட் படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

மிக விரைவில் நல்ல செய்தி: அஜித்தின் 'பில்லா' இயக்குனர்

தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய 'பில்லா' திரைப்படத்தின் 10வது ஆண்டு விழா இன்று அஜித் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பத்து விரல்களும் இல்லாமல் பி.எச்.டி படித்து முடித்த சாதனைபெண்

கும்பகோணத்தில் கிருஷ்ணன் - ஹேமா தம்பதியரின் மகள் மாளவிகா. சிறுவயதில் வெடிகுண்டு விபத்து ஒன்றால் இரண்டு கைகளையும் இழந்தார். கால்களில் பயங்கர சேதம்