ரஜினியின் 2 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மறைவு.. இரங்கல் தெரிவித்த ரஜினி..!

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும் ஏராளமான கன்னட படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் காலமான நிலையில் அவருக்கு ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் துவாரகிஷ் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1966 ஆம் ஆண்டிலிருந்து தயாரிப்பு தொழிலில் இவர் ஈடுபட்டு வந்தார் என்பதும் ரஜினிகாந்த் நடித்த ’அடுத்த வாரிசு’ மற்றும் ’நான் அடிமை இல்லை’ ஆகிய இரண்டு தமிழ் படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார்.

மேலும் ஏராளமான கன்னட படங்களில் நடித்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி அதன்பின் முக்கிய வேடத்தில் நடித்த பின்னர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனது வீட்டில் துவாரகிஷ் காலமானதாக அவருடைய மகன் அறிவித்துள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் துவாராகிஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில் அவர் கூறியிருப்பதாவது:

எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷ் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடன் பழகிய இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.

More News

ஆக்‌ஷன் - ரியாக்சன்.. மைக் மோகனை இந்த ஆங்கிளில் பார்த்ததே இல்லையே.. 'ஹரா' டீசர்.!

நடந்த 90 ஆம் ஆண்டுகளில் மைக் பைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் மோகன் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தார் என்பதும் கமல், ரஜினி ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது

5 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த இன்னொரு மலையாள படம்.. ஏக்கத்துடன் பார்க்கும் தமிழ் திரையுலகம்..!

ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து தமிழ்

விக்ரமின் 'சியான் 62' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. நாளை ஒரு ஆச்சரிய அறிவிப்பு?

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருப்பில்லாதவர்களால் ஏற்பட்ட விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய 'கயல்' சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் நாயகி ஆக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாகவும் இந்த விபத்து பொருப்பில்லாதவர்களால் ஏற்பட்டது

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு.. நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சமீபத்தில் விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.