close
Choose your channels

சற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thursday, December 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும், கட்சியை ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் இன்று அறிவித்தார்

மேலும் தான் தொடங்க இருக்கும் கட்சிக்கு டாக்டர் அர்ஜுனா மூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் இருப்பார் என்றும் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது: ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனா மூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகி விட்டார் என்பதும் அவரது ராஜினாமாவை பாஜக ஏற்றுக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.