தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது. விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு அரசியல்வாதிகளும், கோலிவுட் திரையுலகினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், 'மரியாதைக்குரிய கே.விஸ்வநாத்தின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரதிற்கு நான் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், திறமையானவர்களுக்கு எப்போதுமே மதிப்பளித்து அவர்களின் சாதனைகளை பாராட்டி வருபவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதா சாகேப் விருது மட்டுமின்றி கே.விஸ்வநாத் அவர்கள் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது...

டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?

விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது

தினகரனை யார் என்றே தெரியாது! முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது குறித்த வழக்கு ஒன்றில் டிடிவி தினகரனிடம் நான்காவது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது.

டிடிவி தினகரன் கைது எப்போது? நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.