close
Choose your channels

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை: கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் பி.ஆர்.ஓ. பதில்!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ரஜினியின் பி.ஆர்.ஓ பதிலளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை கஸ்தூரி, ரஜினிகாந்தின் அமெரிக்க பயணம் குறித்து ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார். குறிப்பாக அவருடைய அமெரிக்க பயணத்திற்கும் திடீரென அவர் அரசியலிலிருந்து விலகியதற்கும் சம்பந்தம் இருப்பதாகவும் இது குறித்து ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இரண்டு நாள் கழித்து பதிவு செய்த மற்றொரு ட்வீட்டில் ’அலைபேசியில் தனக்கு விளக்கம் வந்ததாகவும் தனது கலக்கம் தீர்ந்தது என்றும் விரைவில் தலைவர் தமிழகத்திற்கு நலமுடன் திரும்புவார் என்றும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரஜினிகாந்த் அல்லது அவருடைய தரப்பில் இருந்து கஸ்தூரியிடம் தொடர்புகொண்டு பேசி விளக்கமளித்து இருப்பார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது ரஜினிகாந்தின் பிஆர்ஓ டுவிட் ஒன்றை பதிவு செய்து கஸ்தூரிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்,. இதுகுறித்து ரஜினிகாந்த் பி.ஆர்.ஓ தனது டுவிட்டரில், ‘தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை, எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பது தான் நிஜம்’ என்று பதிவு செய்துள்ளார். இதற்கு கஸ்தூரி விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது: என்னை அழைத்து பேசியது கங்கை அமரன் அவர்கள். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos