close
Choose your channels

ரஜினிக்கு மிக உயர்ந்த விருது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

Thursday, April 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் திரையுலகின் மிக உயர்ந்த விருது அறிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வருகிறார் என்பதும் ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் தற்போது தமிழ் திரையுலகில் இருந்தாலும் ரஜினிக்கான சூப்பர் ஸ்டார் இடம் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.