இந்தி மொழி திணிப்பு: ரஜினியின் 'துரதிஷ்டவசமான' கருத்து

  • IndiaGlitz, [Wednesday,September 18 2019]

ஒரே நாடு ஒரே மொழி என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்தில் இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று பேசியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது மொழி என்பது மிகவும் அவசியம். பொது மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் அது சாத்தியம் இல்லை. இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவே ஏற்றுக்கொள்ளாது. ஏன், ஒருசில வட மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். துரதிஷ்டவசமாக பொதுமொழி சாத்தியம் இல்லை என்று ரஜினி கூறியதால் அவர் இந்தி மொழியை மறைமுகமாக ஆதரிப்பதாக குறை கூறியும், தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவே இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என்று கூறியதால் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

19 வயது கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்: பெற்றோர் மிரட்டுவதாக புகார்!

சென்னையை சேர்ந்த கல்லூரி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனக்கும், தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என போலீஸில் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

'மிஷன் இம்பாஸிபிள் 2' நடிகருடன் இணைந்த 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் நாயகியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே தற்போது ஆப்பிள் டிவிக்காக ஒரு வெப் சீரீஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

ரஜினி படத்தை முந்திய சிரஞ்சீவி படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரிக்குவித்தது. மேலும் சமீபத்தில்

ஷெரினுடன் திடீரென நெருக்கமாகும் கவின்! லாஸ்லியா கோபமா?

பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், முதலில் நான்கு பெண்களுடன் ஜாலியாக பழகினார். அதன்பின் சாக்சியுடன்  காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட

இறுதிப்போட்டி டாஸ்க்கில் லாஸ்லியா காயம்! சாண்டி காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு தேர்வாகும் டாஸ்க்குகள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய டாஸ்க்கில் லாஸ்லியாவுக்கு காயம் ஏற்படுகிறது