கமல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், ரஜினி ஆதரவு தருவேன் என்று கூறியிருப்பதாகவும், அவர் ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும் கமல் ஒருசில பேட்டிகளில் கூறியிருந்தார். வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் விளக்கமாக கூறியிருந்தும் கமல் இவ்வாறு பேட்டி அளித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், 'என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம்' என்று கூறினார்.

மேலும் நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது என்றும் நதிகள் இணைப்பு குறித்து தான் ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூறியிருந்ததாகவும், அந்த வகையில் பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து கொடுத்த வாக்குறுதியின்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக நதிகள் இணைப்பை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் நாட்டின் வறுமை பாதி குறைந்துவிடும் என்றும் கூறினார்.

மேலும் தேர்தல் நேரம் என்பதால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என்றும், தயவு செய்து தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் கூறி தனது பேட்டியை முடித்து கொண்டார்.
 

More News

ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் திடீர் சந்திப்பு! அடுத்த பட திட்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ? வருடத்திற்கு இரண்டு படங்கள் தனது ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டார் போல் தெரிகிறது.

நாங்க யார்கிட்டயும் காசு வாங்கவில்லை: அய்யாக்கண்ணு பேட்டி

கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நிர்வாண போராட்டம் உள்பட பல்வேறு நூதனப்போராட்டம் நடத்திய விவசாயி சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு

ஆர்.கே.நகர் ரிலீஸ் தள்ளி வைப்பு! அரசியல் அழுத்தம் காரணமா?

வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பெனி தயாரித்த 'ஆர்.கே.நகர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தபோது,

நான் கூட சிவப்பு சிந்தனையாளர்ன்னு நினைச்சேன்: கரு.பழனியப்பனை கலாய்த்த கஸ்தூரி

இயக்குனர் கரு.பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் அவரது விமர்சனத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் ஆளாகினர்.

ராஜஸ்தானில் பயங்கர புழுதிப்புயல்: 

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் அவ்வப்போது புழுதிப்புயல் ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ராஜஸ்தானில் பயங்கர புழுதிப்புயல் ஏற்பட்டது.