அதிமுக இன்று சொன்னதை 2013ஆம் ஆண்டே சொன்ன ரஜினி!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2019]

சமீபத்தில் நடைபெற்ற ’கமலஹாசன் 60’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது ’முதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றும், ஆனால் அதிசயம் நடந்தது என்றும், அது மட்டுமின்றி அவரது ஆட்சி 6 மாதத்தில் கலைந்துவிடும் என்று பலர் நினைத்த நிலையில் தற்போதும் அவரது ஆட்சி தொடர்ந்து அதிசயமாக நடந்து கொண்டிருப்பதாகவும், இதே மாதிரி அதிசயம் நேற்றும் நடந்தது, இன்றும் நடந்தது நாளையும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

ரஜினிகாந்த் அவர்களின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று அதிமுக நாளேடு ஒன்றில் ’கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ஆவோம்’ என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால் இதே கருத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த மேடையில் பேசிய போது ’பலருக்கும் அதிசயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிசயங்கள் நடக்கும். ஒரு சாதாரண பஸ் கண்டக்டர், இத்தனை உயர்ந்த மனிதர்களோடு ஒரே மேடையில் இருப்பதே அதிசயம் தான்’ என்று கூறியுள்ளார் மொத்தத்தில் ரஜினி கூறிய கருத்தையே அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக நாளேடும் தெரிவித்துளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பாரா கிளைடர் விபத்து: தேனிலவு சென்ற சென்னை இளைஞர் பலி!

சென்னை இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி தேனிலவு சென்ற இடத்தில், அவர் மனைவி கண் முன்னே பாராகிளைடர் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

ரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

அதிமுக, திமுக என இரண்டு பெரிய கூட்டணியை தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு பெரிய கூட்டணி அமைய வேண்டும் என்றும், ரஜினி, கமல் தனித்தனியாக களம் கண்டால்

கமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை!

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆனதையடுத்து

கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!

வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவி வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் வகையில் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஐதராபாத் அருகே நடந்துள்ளது

ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது