இதுமாதிரி செய்யனும்ன்னு அவங்க இனிமேல் கனவில் கூட நினைக்க கூடாது: ரஜினிகாந்த்


Send us your feedback to audioarticles@vaarta.com


இது போன்ற ஒரு செயலை செய்ய வேண்டும் என்று தீவிரவாதிகள் கனவில் கூட நினைக்க கூடாது, அந்த அளவுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என பெஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெஹல்காம் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘காஷ்மீரில் அமைதி திரும்பி வருவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை’ என்றும், ‘அதனை கெடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்’ என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னால் இருப்பவர்களை கூடிய விரைவில் கண்டுபிடித்து, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்’ என்றும், ‘இந்த தண்டனையை அடுத்து இனிமேல் இப்படி ஒரு செயலை அவர்கள் கனவில் கூட செய்ய நினைக்க கூடாது’ என்றும் அவர் கூறினார்.
அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ’ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments