பிரதமர் மோடி ஒரு போராளி.. காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார்: ரஜினிகாந்த்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதமர் மோடி ஒரு போராளி என்றும், அவர் கண்டிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாட்டில் பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், மோகன் லால், ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்ஷய் குமார், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசும்போது, பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்றும், இறக்கமற்றது என்றும் ரஜினிகாந்த் கூறினார். “நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு அமைதியை கொண்டு வருவார். ஏனெனில் அவர் ஒரு போராளி,” என அவர் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய சூழ்நிலையில் இந்த நிகழ்வு ஒத்தி வைக்கக்கூடும் என்று பலர் கூறினார்கள். ஆனால், பிரதமர் மோடி மீது எனக்கு உள்ள நம்பிக்கை காரணமாக இந்த நிகழ்வு நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் வந்தேன்,” என்றும் அவர் கூறினார்.
பெஹல்காம் தாக்குதல் மனிதத்தன்மையற்றது என்றும், முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்றும் கூறிய ரஜினிகாந்த், “பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. இதை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments