close
Choose your channels

நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகாது: ரஜினிகாந்த்

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய தர்பார் இசை வெளியிட்டு விழாவில் தமிழகம் வந்த கதையை அடுத்து ‘நம்பிக்கை’ குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:

முதல் முதலாக நான் தமிழகம் வந்தபோது டிக்கெட் கலெக்டரும், கூலி தொழிலாளிகளும் என் போல் நம்பிக்கை வைத்தது போல் என் மீது அடுத்ததாக நம்பிக்கை வைத்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள். ரஜினிகாந்த் என்ற பெயரை அவர் தேர்வு செய்து ஒரு மிகச் சிறந்த நடிகருக்கு மட்டுமே இந்த பெயரை வைக்க வேண்டும் என்று நான்கு வருடங்களாக காத்திருந்தார். அவர் கடைசியாக என் மேல் நம்பிக்கை வைத்து அந்த பெயரை எனக்கு வைத்தார். அவர் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை

பாலசந்தர் அவர்களை அடுத்து என்னை ஹீரோவாக்கிய கலைஞானம் அவர்கள் என்மேல் வைத்த நம்பிக்கை. கலைஞானம் அவர்களிடம் சென்று ரஜினியை ஹீரோவாக போட வேண்டாம் என்று பலர் கூறினார்கள். ஆனால் அவர் என்மேல் நம்பிக்கை வைத்து பைரவி என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கி என்னைஒரு ஹீரோவாக உருவாக்கினார். அவருடைய நம்பிக்கையும் வீண்போகவில்லை. அந்த படம் நல்ல ஹிட்டானது

அதன் பிறகு என் மேல் நம்பிக்கை வைத்து பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்கள். இதுவரை நான் நடித்த 160 படங்களில் சுமார் 100 தயாரிப்பாளர்களுக்கு மேல் என்னை நம்பி பணம் முதலீடு செய்தார்கள். ரஜினி படத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் வராது என்று அவர்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அதேபோல் நீங்களும் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்றுமே வீண் போகாது’ என்று பேசியதும் சில நிமிடங்கள் கைதட்டல் ஒலி தொடர்ந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.