வட்டிக்கு கடன் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது..! வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் பதில்.

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும், இதன் காரணமாக, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.கடன் கொடுத்ததை தொழிலாக கருத முடியுமா? என்று கேட்டபோது, தான் இதனை தொழிலாக செய்யவில்லை என்றும், தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று வழக்கை கைவிடுவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

More News

நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020  - 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ்..! 6000 பேர் பாதிப்பு.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் இரண்டு பரபரப்பான டுவிட்டுக்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை ஆக்ரோஷமாக தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே

ராதாரவியுடன் நேருக்கு நேர் மோத முடிவு செய்த சின்மயி! பெரும் பரபரப்பு

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

பிரபல தமிழ் குணசித்திர நடிகர் காலமானார்!

வைதேகி காத்திருந்தாள், சிந்துபைரவி, விக்ரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் டிஎஸ் ராகவேந்திரா இன்று காலமானார்