close
Choose your channels

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கக்கடலில் உருவாகிய கஜா புயல் நேற்று நாகை அருகே கோரத்தாண்டவம் ஆடி கரை கடந்தது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்ததோடு, மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 'கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்' என்று கூறியுள்ளார். நேற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசனும் ஆறுதல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.