முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு திடீரென சென்ற ரஜினிகாந்த்.. என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி வீட்டுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கதாக கூறி அதன் பின் வாங்கி விட்டாலும் அரசியல் தலைவர்களின் வீட்டுக்கு அவர் செல்வதும் அவருடைய வீட்டிற்கு அரசியல் தலைவர்கள் தேடி வருவதுமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகன் திருமணம் மார்ச் மூன்றாம் தேதி நடந்த நிலையில் ரஜினிக்கு அவர் அழைப்பிதழ் கொடுத்து கண்டிப்பாக திருமணத்திற்கு வரவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் படப்பிடிப்பு காரணமாக இந்த திருமணத்தில் நேரில் சென்று பங்கேற்க முடியாத நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்ததும் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு சென்று மணமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் ஸ்ரீ ராகவேந்திரா புகைப்படத்தை மணமக்களுக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது மகன் V.விஜய் விகாஸ் - C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். pic.twitter.com/0V2CB29vgA
— SP Velumani - SayYEStoWomenSafety & AIADMK (@SPVelumanicbe) April 29, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments