close
Choose your channels

ராஜராஜ சோழன் ஆட்சியை ரஜினிகாந்த் அமைப்பார்: அர்ஜூன் சம்பத்

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைவார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த்-ஸ்டாலின் என்ற இரு முனை போட்டி மட்டுமே இருக்கும் என்றும் இந்த போட்டியில் ரஜினிகாந்த் வென்று முதல்வராவார் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தவுடன் நல்லாட்சி தருவார் என்றும் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பார் என்றும் கூறிய அர்ஜுன் சம்பத், இராஜராஜ சோழனின் ஆட்சியை ரஜினிகாந்த் தருவார் என கூறினார் .

ராஜராஜசோழன் காலத்தில் தமிழகத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகவும், அதேபோல் ரஜினி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகமே செழிப்பாக மாறிவிடும் என்று கூறிய அர்ஜூன் சம்பத், ரஜினிகாந்த ஆட்சிக்கு வந்தவுடன் இயற்கையே மழை பொழிந்து தமிழகத்தை வளமாக வைத்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ராஜராஜ சோழனது காலத்து அரசியல்தான் உண்மையில் ஆன்மீக அரசியல் என்றும், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது ராஜராஜ சோழனது ஆட்சி என்றும், அவருடைய ஆட்சியில் நீதி, நேர்மை தழைத்ததாகவும், கலைகள் ஓங்கி வளர்ந்ததாகவும் கூறிய அர்ஜூன் சம்பத், ஒருசிலர் ராஜராஜ சோழன் மீதே ஜாதி சாயம் பூசுவதாகவும், அதையெல்லாம் முறியடித்து ராஜராஜ சோழன் ஆட்சியை ரஜினிகாந்த் தருவார் என்றும் அர்ஜூன் சம்பத் மேலும் தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.