ராஜராஜ சோழன் ஆட்சியை ரஜினிகாந்த் அமைப்பார்: அர்ஜூன் சம்பத்

  • IndiaGlitz, [Monday,July 15 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைவார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த்-ஸ்டாலின் என்ற இரு முனை போட்டி மட்டுமே இருக்கும் என்றும் இந்த போட்டியில் ரஜினிகாந்த் வென்று முதல்வராவார் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வந்தவுடன் நல்லாட்சி தருவார் என்றும் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பார் என்றும் கூறிய அர்ஜுன் சம்பத், இராஜராஜ சோழனின் ஆட்சியை ரஜினிகாந்த் தருவார் என கூறினார் .

ராஜராஜசோழன் காலத்தில் தமிழகத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்ததாகவும், அதேபோல் ரஜினி ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகமே செழிப்பாக மாறிவிடும் என்று கூறிய அர்ஜூன் சம்பத், ரஜினிகாந்த ஆட்சிக்கு வந்தவுடன் இயற்கையே மழை பொழிந்து தமிழகத்தை வளமாக வைத்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ராஜராஜ சோழனது காலத்து அரசியல்தான் உண்மையில் ஆன்மீக அரசியல் என்றும், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது ராஜராஜ சோழனது ஆட்சி என்றும், அவருடைய ஆட்சியில் நீதி, நேர்மை தழைத்ததாகவும், கலைகள் ஓங்கி வளர்ந்ததாகவும் கூறிய அர்ஜூன் சம்பத், ஒருசிலர் ராஜராஜ சோழன் மீதே ஜாதி சாயம் பூசுவதாகவும், அதையெல்லாம் முறியடித்து ராஜராஜ சோழன் ஆட்சியை ரஜினிகாந்த் தருவார் என்றும் அர்ஜூன் சம்பத் மேலும் தெரிவித்தார்.
 

More News

விஜய்யின் 'பிகில்' படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, விவேக் ஆகிய இரண்டு காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

மறைவுக்கு பின் வெளிவரும் கமல்ஹாசன் சகோதரரின் திரைப்படம்

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கடந்த 2017ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த ஒரு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது 

அஞ்சலியின் அடுத்த படத்தில் மணிரத்னம் அறிமுகம் செய்த நடிகை

விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடித்த 'சிந்துபாத்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஞ்சலி தற்போது சீனுராமசாமி இயக்கும் படம், சமுத்திரக்கனி-சசிகுமாரின் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

உங்களால் இதை செய்ய முடியுமா? சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா நேற்று ஒரு விழாவில் காட்டமாக விமர்சனம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

வனிதா 'அதை' கடைசி வரை சொல்லவே இல்லை: லாஸ்லியா வருத்தம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸின் இந்த முடிவு ஆச்சரியமாக இருந்தாலும் அனைவருக்கும் திருப்தியாக இருந்தது