சிஏஏ சட்டதிருத்தம்: களத்தில் இறங்க ரஜினிகாந்த் முடிவு

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக இஸ்லாமிய அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் நேற்று தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு ஒருவேளை ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின் போதும் ’சட்டம் வாபஸ் வாங்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்பட்டது என்றும் இந்த போராட்டம் தேவையற்றது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னையில் போராடி வரும் இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மத குருமார்களை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு மிக விரைவில் நடைபெறும் என்றும், சிஏஏ தொடர்பான தனது நிலைப்பாட்டை இஸ்லாமிய மத குருமார்களிடம் ரஜினிகாந்த் விளக்கதிட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

இசைஞானின் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக தனது படங்களுக்கான இசைப் பணிகளை சென்னை சாலிக்கிராமம் பகுதியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மேற்கொண்டு வந்தார்.

கமல்ஹாசனை மிஞ்சிய விக்ரம்: மிரட்டும் 'கோப்ரா' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

சியான் விக்ரம் நடிப்பில் 'டிமாண்ட்டி காலனி' 'இமைக்காநொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா

சம்மர் வரப்போகுது.. இந்தமுறை சாதாரணமா இருக்காது..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

இந்த ஆண்டு கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் மட்டுமல்ல.. ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என பரவும் கொரோனா வைரஸ்..!

ஈரான் துணை அதிபர் மசூமே எப்டருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இதுவரை 245 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணியிடமாற்றம் செல்லாது..! உயர்நீதிமன்றம்.

போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்து, அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.