'நன்றி தலைவா'! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சச்சின் பதில்

  • IndiaGlitz, [Wednesday,April 19 2017]

இந்திய கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை சச்சினின் கிரிக்கெட் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் சச்சின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு சச்சின் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'நன்றி தலைவா! நீங்கள் இந்த படத்தை தமிழில் பார்த்து ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

தமிழ்ப்படங்களுக்கு வழங்கப்படும் 30% வரிச்சலுகை ரத்து

கடந்த சில வருடங்களாக தமிழ் படங்கள் தொடங்கும்போது ஒரு டைட்டிலும் பின்னர் வரிச்சலுகைக்காக இன்னொரு டைட்டிலும் வைக்கப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

'பாகுபலி 2' படக்குழுவினர்களுக்கு உதவிய தயாரிப்பாளர் சங்கம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அருள்நிதியின் 'பிருந்தாவனம்' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'மெளன குரு', 'டிமாண்டி காலனி' போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படம் 'பிருந்தாவனம்.

சிம்புவின் 'AAA' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிசினஸ்கள் என்ன ஆச்சு?

சென்னை ஆர்.கே.நகரில் கடந்த மாதம் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அப்பகுதி மக்கள் வழக்கமான பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக கைவிட்டு புதிய வேலைவாய்ப்புகளை தாங்களாகவே உருவாக்கி கொண்டனர்.