கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி சிக்கிரம் குணமாக வேண்டும்: ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அபாய கட்டத்தில் இருந்த அவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் எஸ்பிபி மிக விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் இமயம் பாரதிராஜா, கவியரசு வைரமுத்து உள்பட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று எஸ்பிபி விரைவில் குணமாகி வரவேண்டும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலில் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்பிபி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

More News

14 வருடங்களுக்கு முன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் புகைப்படம்

14 வருடங்களுக்கு முன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிரபல காமெடி நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தல தோனி 7.29க்கு ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்

கடந்த 15ஆம் தேதி இந்திய நாடே சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது சரியாக இரவு 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை தல தோனி அறிவித்தார்

பேண்ட்டை திருப்பி போட்டுட்டாரா ஷிவானி? நெட்டிசன்கள் கிண்டல்

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பேஸ்புக் பழக்கத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: கர்ப்பமானதும் கைவிட்டு போன கணவர்!

ஃபேஸ்புக் பழக்கத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமானதும் தனது கணவர் தன்னை விட்டு போனதால் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார் 

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய தமிழ் நடிகர்-அரசியல்வாதி!

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேலானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்