அஜித்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுமா? ராஜ்கிரண்

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

பிரபல குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் தனுஷ் இயக்கத்தில் நாயகனாக நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் ராஜ்கிரண் சமீபத்தில் இந்த படம் குறித்தும் அஜித்துடன் 'கிரீடம்' படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'கிரீடம்' படத்தில் அஜித்தின் தந்தையாக நடித்த ராஜ்கிரண், அந்த அனுபவங்கள் குறித்து கூறியபோது, 'அஜித் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் இதுவரை பார்த்தது இல்லை. 'கிரீடம்' படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அஜித் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார். அப்படி இருந்தும் தன்னால் தயாரிப்பாளருக்கு சிறு நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கடுமையான வலியையும் பொறுத்துக்கொண்டு படத்தை முடித்து கொடுத்தார். ஒரு ஐந்து நிமிடம் அவரால் நாற்காலியால் உட்கார முடியாத நிலை இருந்தும் அந்த வலியை தனக்குள் மறைத்து கொண்டு நடித்தவர் அஜித்' என்று கூறினார்.
மேலும் அஜீத், சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமாக மதிப்பு கொடுப்பவர்' என்று அஜித்தை ராஜ்கிரண் புகழ்ந்து பேசினார்.
கடந்த சில வருடங்களாகவே கோலிவுட் நடிகர்கள் தாங்கள் நடித்த படம் வெளியாகும் ஒருசில தினங்களுக்கு முன்னர் அஜித் குறித்து பெருமையாக பேசி தங்கள் படங்களுக்கு புரமோஷன் தேடி வரும் நிலையில் ராஜ்கிரணும் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை. கலெக்டர் உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் 12ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

யுவன்ஷங்கர் ராஜா-கார்த்திக் ராஜா இணைந்த தமிழ்ப்படம்

இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுகளாக அவரது மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இருந்தபோதிலும் யுவன்ஷங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் உள்ளார். அதுமட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' எ&#

டெல்லியில் போராடும் விவசாயி அய்யாக்கண்ணு திடீர் மயக்கம். மருத்துவமனையில் அனுமதி

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்து நடத்தி வருகிறார்...

நான் கமல் கோபத்தை 100% பார்த்தவன். சந்திரஹாசன் நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள அவருடைய மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்த நிலையில் இன்று சென்னை காமராஜர் அரங்கில் சாருஹாசனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன், சாருஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட&