'அமரன்' படம் எடுத்தபோது நான் அனுபவித்தவை: பெஹல்காம் தாக்குதல் குறித்து ராஜ்குமார் பெரியசாமி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அழகான சுற்றுலா பகுதியான பெஹல்காம் பகுதியில் நேற்று நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பெஹல்காம் இடத்தில் தான் ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு நடத்தினோம் என்று அந்த அனுபவத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்து உள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அந்தக் கொடூரமான தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பங்களும் அனுபவித்த வேதனை மனிதாபிமானத்துக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் எதிரான கடுமையான தாக்கமாகும்!
அழகான பெஹல்காம் காஷ்மீரின் சுற்றுலா மையமாக விளங்குகிறது, ஆண்டுக்கு 2 கோடிக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம். ’அமரன்’ படப்பிடிப்பின்போது அங்கே நான் அனுபவித்த நினைவுகள் சிறப்பானவை. அங்குள்ள மக்கள் சுற்றுலா பயணிகளிடம் மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, காயமடைந்தவர்களுக்கு எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். இவ்வாறு ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
#PahalgamTerrroristAttack This cruel act of terror on those poor victims and their families is a severe blow to humanity, peace and progression! 💔⚫️
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) April 23, 2025
Beautiful #Pahalgam is the heart of tourism in #Kashmir attracting more than 2crore tourists annually. Have had wonderful… pic.twitter.com/86qRv7KNwj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com