close
Choose your channels

இவங்க ரெண்டு பேர் தொல்லை தாங்க முடியலை சார்: கமலிடம் கம்ப்ளெண்ட் செய்த ராஜூ!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய 2 பேர் தொல்லை தாங்க முடியவில்லை என்று கமல்ஹாசனிடம் ராஜூ கம்ப்ளெண்ட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

இன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பிரியங்கா- இமான் ஆகிய இருவரிடையே உள்ள பிரச்சனை குறித்து பேசுகிறார். இமான் அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் ஓ.பி அடிக்கிறார் என்றும் பிரியங்கா கூறியது சரியா? என கமல், தாமரையிடம் கேட்க, அதற்கு தாமரை, ‘இல்லை சார், அவருக்கு எல்லா வேலையும் செய்கிறார், நான் சொல்ல சொல்ல அவர் பழகிக்கொண்டு குழம்பு வைக்க கூட பழமிவிட்டார்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து பேசிய ராஜூ, ‘இவங்க ரெண்டு பேரு தொல்லை தாங்க முடியல சார், சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்’ என்று சொல்ல அப்போது குறுக்கிட்ட தாமரை, ‘பிரச்சினையே இவன் விளக்கவில்லை என்பது தான் சார், இவன் எங்களை பார்த்து நாங்க ரெண்டு பேரும் சண்டை போடுகிறார்கள் என்று கூறுகிறான்’ என்று உண்மையை போட்டு உடைக்க கமல்ஹாசன் உள்பட பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து சிரிக்கும் காட்சிகள் இன்சிய்ச் அடுத்த புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.