close
Choose your channels

போதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்?

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் திரை உலகிலும் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலிவுட் நடிகை ரியாவும் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்

நடிகை ரியாவிடம் போலீசார் செய்த விசாரணையில் அவர் 20 பக்க வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் அந்த வாக்குமூலத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், துணை நடிகர்கள் என 25 பேரின் பெயர்களை அவர் கூறி அம்பலப்படுத்தி உள்ளதாகவும் பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன

குறிப்பாக ரியா கொடுத்த வாக்குமூலத்தில் இடம்பெற்றிருக்கும் பெயர்களில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் ஒருவர் என்று கூறப்படுகிறது. இவர் சூர்யா, கார்த்தி, மகேஷ்பாபு படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது தெரிந்ததே. அதேபோல் தனுஷ் தற்போது நடித்து வரும் பாலிவுட் திரைப்படத்தின் நாயகியான சாரா அலிகான் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது. ரியாவின் வாக்குமூலத்தில் இன்னும் எந்தெந்த பிரபலங்களின் பெயர்கள் இருக்கின்றதோ என்ற பரபரப்பில் பாலிவுட் திரையுலகம் உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.