close
Choose your channels

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: கோபி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Tuesday, September 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரை மீட்க தமிழக, கர்நாடக மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நட்த்தியது. இதன்பயனாக 108 நாட்களுக்கு பின்னர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தனக்கடத்தல் வீரப்பன் உள்பட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் வீரப்பன் உள்பட 4 பேர் விசாரணையின்போது மரணம் அடைந்துவிட்டனர். ரமேஷ் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். எனவே எஞ்சிய 9 பேர் இன்று கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பின்படி உயிருடன் இருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதரங்கள் இல்லாததாலும், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.