பிரபல இயக்குனரின் மருமகள் தயாரிக்கும் படத்தில் கீர்த்திசுரேஷ்!

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

கோலிவுட் திரையுலகில் விஜய், விக்ரம், விஷால், சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மருமகள் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து ராம்கோபால் வர்மாவின் மருமகள் ஷ்ரவ்யா வர்மா கூறுகையில், 'எனது முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். இது எனது கனவுப்படம். கீர்த்திசுரேஷூடன் எனது முதல் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் தில்ராஜூ, இந்த படத்தை விநியோகம் செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாகேஷ் காகுநூர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், ஆதி, ஜெகபதிபாபு உள்பட பலர் நடிக்கவுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

More News

புதிய கல்விக்கொள்கை: சூர்யாவுக்கு பிரபல அரசியல்வாதி ஆதரவு

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்தாலும்

நயன்தாரா திருமணம் எப்போது? உலகக்கோப்பையை கணித்த ஜோதிடர் கருத்து!

நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தற்போது நயன்தாரா திருமணம் குறித்தும் கணித்துள்ளார்.

செய்யறதையும் செஞ்சிட்டு சாரியா கேட்குற? கவினை எகிறிய மீரா

பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணமானவரான மீரா மிதுன், ஒவ்வொரு நாளும் ஒருவரை குறிவைத்து பிரச்சனையை இழுத்து அன்று முழுவதும் அனைவரும் தன்னைப்பற்றியே

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது தெரிந்ததே

'நேர் கொண்ட பார்வை' படத்தின் புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதி!

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை அறிவிக்கவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்தார் என்று வெளிவந்த