நடிகை ரம்பா விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய அறிவுரை

  • IndiaGlitz, [Monday,March 20 2017]

பிரபல நடிகையாக இருந்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகள் கனடாவில் செட்டில் ஆகிய நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சமீபத்தில் நடிகை ரம்பா, தன்னால் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை என்றும், தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரம்பா மற்றும் அவருடைய கணவர் இந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு குறித்து கருத்து கூறிய நீதிபதி, 'கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையை இன்று மாலை சமரச மையத்தில் பேசித் தீர்த்து கொள்ளுமாறு ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் அறிவுரை கூறினார்.

எனவே இன்று மனம் வீட்டு பேசும் ரம்பா-இந்திரன் தம்பதியினர் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இது எனது கனவுப்படம் அல்ல. 'காற்று வெளியிடை இசை விழாவில் கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, கார்த்தி, அதிதி, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்...

இளையராஜா-எஸ்பிபி பிரச்சனைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் முதிர்ச்சியான பதில்

கடந்த சில நாட்களாக இசைஞானி இளையாராஜா பாடகர் எஸ்பிபி-க்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இருவருமே இசைத்துறையில் மேதாவிகள் என்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட திரையுலகினர் அனைவருக்குமே நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்...

அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'பிருந்தாவனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி-ரஞ்சித் படத்தின் நாயகி குஷ்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளது.

20 வருடங்களுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுரேஷ் மேனன்

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் அஜித்தின் படங்கள் வெளியாகும் நாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழா போன்றதுதான்.