'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு? ராம்கோபால் வர்மா அறிவிப்பு

அமெரிக்க நடிகை மியா மல்கோவா நடிப்பில் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய ’கிளைமாக்ஸ்’ திரைப்படம் ஜூன் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜூன் 6ஆம் தேதி இரவு 9 மணி முதல் செயலியில் வெளியாகும் என்று ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு ரூபாய் 100 கட்டணம் என்றும் இது குறித்த மேலும் சில விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மே 30ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவித்ததால் அந்த தேதியில் ரசிகர்கள் ஏமாற்ற கூடாது என்பதற்காக அதே மே 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட உள்ளதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 'கிளைமாக்ஸ்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் அதிகபட்ச கவர்ச்சியை காட்டிய மியா மால்கோவா, இந்த இரண்டாவது டிரைலரில் என்ன செய்ய காத்திருக்கின்றார் என்பதை நாளை மாலை 5 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

பிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களின் ஒருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமானமாக மகத் மற்றும் மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி திருமணம்

தமிழகத்தில் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையிலும் இன்று அதிகபட்சம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் திரைக்கு வர தயாராக இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி

டிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'டிக்கிலோனா'.

4 பேர் பயணம் செய்ய ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்!!!

ஊரடங்கு நேரத்தில் இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்து பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.