ராம்கியின் ரீஎண்ட்ரி 'இங்கிலீஷ் படம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

கடந்த 1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆகியுள்ள படம் 'இங்கிலீஷ் படம்.  ராம்கி, மீனாட்சி, ஸ்ரீஜா, சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ், படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல், பின்னணி இசை நௌசாத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் குமரேஷ் குமார் கூறியதாவது,

இத்திரைப்படத்திற்கு  இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில்  ஒரு  வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு  விற்பதற்கு முயற்சி செய்கிறார்   அந்த    வீட்டில் பேய்  இருப்பதாக  பலராலும் நம்பப்பட ,அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால்  வீட்டை  வாங்கி கொள்வதாக சொல்கிறார்.

எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய  ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக   ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது,  அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த  ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம்  இப்படம்  ராம்கியை  வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும்.  இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். படத்தில் சிங்கம் புலி பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார் அவர் வரும் காட்சிகள் முழுவதும் பயங்கற அலப்பறையாக இருக்கும் என்றும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றும் கூறினார்.

More News

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு விஷால் செய்த கெளரவம்

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை இழந்தது.

இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது.

நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்': திரை முன்னோட்டம்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் ஸ்பைடர்'. நம்மூர் விஜய்க்கு சமமாக தெலுங்கில் பிரபலமான மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்