கொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் அதீத முயற்சியுடன் போராடி வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு கைகொடுக்கும் வகையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கோடிகளிலும், லட்சங்களிலும் நிதியுதவி அளித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் சேர்மன் ராமோஜிராவ் அவர்கள் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.20 கோடி அளித்துள்ளார். இதில் 10 கோடி ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூ.10 கோடி தெலுங்கானா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தெலுங்கு நடிகர்களான பிரபாஸ் 4 கோடி ரூபாயும், பவன் கல்யாண் ரூ.2 கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் 1.25 கோடி ரூபாயும், மகேஷ்பாபு ஒரு கோடி ரூபாயும், சிரஞ்சீவி ஒரு கோடி ரூபாயும், ஜூனியர் என்டிஆர் 75 லட்சம் ரூபாயும் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சென்னையில் விசா வாங்க வந்தவருக்கு கொரோனா: 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் போலீஸ்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா மையத்திற்கு மார்ச் 15ஆம் தேதி விசா வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த தேதியில்

டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

டெல்லியில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில்

தமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் இன்னும் மீண்டு வரவில்லை.

டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்

கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது

தமிழகத்தில் மேலும் 50 பேர்களுக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 124 ஆனதால் அதிர்ச்சி

இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது