close
Choose your channels

கார்களை பந்தாடிய மதம் பிடித்த யானை! வைரலாகும் வீடியோ

Saturday, April 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்களை பந்தாடிய மதம் பிடித்த யானை! வைரலாகும் வீடியோ

கேரள மாநிலத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் கார்கள் உள்பட பல பொருட்களை அந்த யானை துவம்சம் செய்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கேரள மாநிலத்தில் உள்ள குழல்மண்ணம் என்ற கிராமத்தில் நடந்த திருவிழா ஒன்றுக்காக ராஜூ என்ற யானைப்பாகன் தன்னுடைய யானையை அழைத்து வந்தார். விழாவில் கலந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த யானைக்கு மதம்பிடித்தது. இதனால் பாகன் ராஜூவின் கட்டுப்பாட்டை மீறிய அந்த யானை கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் துவம்சம் செய்தது. ஒரு வீட்டில் நின்றிருந்த காரை புரட்டி போட்டதோடு, சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களையும் பந்தாடியது. இந்த யானையால் நான்கு கார்களும் ஒருசில பைக்குகளும் சேதமடைந்துள்ளன.

ஆனாலும் யானைப்பாகன் ராஜுவை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ராஜுவை யானை காலால் எட்டி உதைத்ததால் அவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.