சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரம்யாகிருஷ்ணன்!

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திகில் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.

விக்ரம் நடித்த 'காசி' மற்றும் 'என் மன வானில்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வினயன் கடந்த 1999ஆம் ஆண்டு இயக்கிய மலையாள திரைப்படம் 'ஆகாஷ கங்கா'. முகேஷ், திவ்யா உண்ணி நடிப்பில் வெளியான இந்த படம் தமிழில் 'அவளா ஆவியா'? என்ற பெயரில் வெளிவந்தது. இந்த நிலையில் இயக்குனர் வினயன் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள 'ஆகாஷ கங்கா 2' திரைப்படத்தில் சித்திக், ஆசிப் அலி, ஸ்ரீநாத் பாசி, விஷ்ணு கோவிந்த், விஷ்ணு வினய், உள்பட பலர் நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ரம்யாகிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகவுள்ள இந்த படத்திற்கு பிஜூபால் இசையமைக்கவுள்ளார். கடந்த 16ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின்போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More News

இந்த ஏரியின் அருகே ஒரு மணி நேரம் நின்றாலே மரணம் நிச்சயம்!

இயற்கை மனிதர்களை பல்வேறு வகையில் பாதுகாத்து வந்தாலும், மனிதர்கள் செய்யும் தவறுகளால், விஷய தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது..

பொது இடத்தில், கணவரை ஷூ லேஸ் கட்ட வைத்த நடிகை சோனம் கபூர்! வைரலாக பரவும் புகைப்படம்!

பொது இடத்தில் கௌரவம் பார்க்காமல், பிரபல நடிகைக்கு அவருடைய கணவர் ஷூ லேஸ் கட்டி விட்ட சம்பவம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனையா?

தாய்லாந்து நாட்டில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பெற்ற குழந்தைகளை பட்டினி போட்ட தம்பதிக்கு ஆயுள்தண்டனை

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு சித்ரவதை செய்த பெற்றோருக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது. 

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்... துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட19 வயது மாணவி!

பங்களாதேஷில் தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என போலீசில் புகார் கொடுத்த மாணவியை சிலர் துடிக்க, துடிக்க, உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.