சிவகார்த்திகேயன் பட ஹீரோவின் அடுத்த படத்தில் ரம்யா நம்பீசன்

  • IndiaGlitz, [Monday,October 14 2019]

சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் நாயகனான ரியோ ராஜ் அடுத்ததாக 'செம போத ஆகாதே' இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசனின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என கருதியதால் அவர் ஒப்பந்தம் செய்யப்படதாகவும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்

சென்னை, கொடைக்கானல், கேரளா, குஜராத் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு கதை என்றும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் பாலசரவணன், ரோபோ சங்கர், முனிஸ்காந்த், விஜி, சந்தானபாரதி, ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இயக்குனர் பத்ரி தெரிவித்துள்ளார்.

More News

கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்த படத்தில் நயன்தாரா

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், 'பாகுபலி' நடிகர் ராணா டக்குபாய் தயாரிக்கும் கொரிய மொழி ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

எனக்கும் முகினுக்கும் என்னெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லட்டுமா? மிராமிதுனின் புதிய வீடியோ

பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர் மீராமிதுன் குறித்த ஆடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவர் அந்த ஆடியோவுக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

கார்த்தியின் 'கைதி' சென்சார் தகவல்

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் படமான 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்

திருச்சியில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் சமீபத்தில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகன் உள்பட ஒரு சில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்

கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் திடீரென திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை.