மேஜிக்.. அமைதி.. பவர்.. ஆன்மீக பயணத்தில் நடிகை ரம்யா பாண்டியன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரம்யா பாண்டியன், திருவண்ணாமலை கிரிவலம் சென்ற ஆன்மீகப் பயணத்தில், தனக்கு "மேஜிக் , அமைதி மற்றும் பவர்" கிடைத்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில், நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியன், பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது அறிந்ததே.
இந்த நிலையில், கடந்த ஆண்டு யோகா மாஸ்டர் தவான் என்பவரை ரம்யா பாண்டியன் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்னரும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட ரம்யா பாண்டியன், சமீபத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செல்லும் ஒவ்வொரு அடியும், தனக்கு ஒரு நிரந்தரமான அமைதியைத் தருவதாகவும், ஒரு பவர் என்னுள் வருவதை உணர்ந்ததாகவும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் முழுக்க முழுக்க மேஜிக் மாறும் ஒரு அற்புதம் நடக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, அவருடன் சென்ற ஒருவர், “நீங்கள் ஒரு தேவதை. உங்களுடன் கிரிவல பாதையில் நடப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்,” என்று குறிப்பிட்ட பதிவையும் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மொத்தத்தில், ரம்யா பாண்டியன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மேற்கொண்ட ஆன்மீகப் பயணம், அவருக்கு முழு திருப்தி அளித்ததை காட்டுகிறது. தற்போது ரசிகர்கள் அவருக்கு திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் அவருக்கு அனைத்து நன்மைகளை வழங்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments