அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினர்: பிரபல தமிழ் இயக்குனர் கண்டனம்

  • IndiaGlitz, [Sunday,May 31 2020]

அமெரிக்காவில் கடந்த வாரம் மினியாப்பொலிஸ் என்ற பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க கருப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் காலாலேயே மிதித்து கொல்லப்பட்டார். இது குறித்த வீடியோ உலகமெங்கும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது என்பதும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கருப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து இந்தியாவில் உள்ள பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதற்காக குரல் கொடுத்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் தனது சமூக வலைப்பக்கத்தில் இதுகுறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

ஜார்ஜ் ஃப்ளாய்டை மூச்சுவிட முடியாமல் இனவெறி பிடித்த அந்த அதிகாரி காலால் மிதித்து கொன்றார். ஆனால் நம்மால் மூச்சு விடமுடியும். எனவே இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம் என பதிவு செய்துள்ளார். மேலும் இந்தியாவிலும் தலித் மக்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதாகவும் இதனை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

More News

கொரோனா எதிரொலி: மாற்று வழியில் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் பாலியல் தொழிலாளிகள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்க்ள் வரை பலரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

எனக்காகவே எழுதப்பட்ட பாட்டா? விஜய்சேதுபதி பட இயக்குனர் ஆச்சரியம்

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனை காரணமாக அந்த படம் ரிலீஸ்

14 ஆயிரத்தை நெருங்கும் சென்னை கொரோனா பாதிப்பு: ராயபுரத்தில் எவ்வளவு?

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் இன்று பேருந்து போக்குவரத்து உள்பட பல அறிவிக்கப்பட்ட தளர்வுகள் சென்னைக்கு கிடைக்கவில்லை.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிந்துமாதவி: ஏன் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 

தமிழக முதல்வருக்கு பாரதிராஜா எழுதிய முக்கிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நேற்று அனுமதி அளித்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்கள்