close
Choose your channels

ஆணவக்கொலைகள் குறித்த திரைப்படத்திற்கு பா.ரஞ்சித் பாராட்டு!

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ஆணவ கொலைகள் குறித்த திரைப்படம் ’கன்னிமாடம்’. நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தற்போது ஓடி வருகிறது. இந்த படத்திற்கு திரையுலக பிரமுகர்கள் பலர் ஏற்கனவே பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது கபாலி, காலா உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது: கன்னிமாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல் #ஆணவக்கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் போஸ்வெங்கட் அவர்களுக்கும், அத்திரைப்பட குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

பா.ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பதில் அளித்த நெட்டிசன்கள் ’இயக்குனர் பா.ரஞ்சித், ‘திரெளபதி’ படத்தையும் பார்த்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திரெளபதி’ படத்தை பார்த்து ரஞ்சித் தனது கருத்தை தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.